உலகம் உறைய நேரிட்டால்

>> செவ்வாய், 18 நவம்பர், 2008

உலகம் உறைய நேரிட்டால்


THE DAY AFTER TOMORROW என்றொரு ஆங்கிலத் திரைப்படம். சூறாவளியும் வெள்ளபெருக்கும் நகரங்களை அழித்தொழித்து, மக்களின் உயிரை உறையவைப்பதாக இந்தப் படம் காட்டுகின்றது. "இதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. உலகளாவிய காலநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. என்னேனும் ஒரு நாள் கடுமையான பாதிப்பை அது ஏற்படுத்தியே தீரும்" என்று சீன அறிவியலாளர் DONG WENTIE கூறுகிறார்.

உலகளாவிய வெப்பமானது, பூமியை எப்படி உறையச் செய்யும் என்று, சாதாரன மக்கள் கேள்வி எழுப்பலாம். அல்லது புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கலாம். ஆனால், நிபுணர்கள் அதற்கான விளக்கத்தை தர முடியும். இந்த வெப்ப அதிகரிப்பானது, பனிப்பாறைகளை உருகச் செய்யும், கடலின் வெப்பநிலை குறையுமாறு செய்யும். அடுத்த 20 ஆண்டுகளில், உலகில், தீவிரவாதிகளால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நிலப் பரப்பு, மூல வளம் ஆகியவை குறைந்து போவதன் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்களினால், பிராந்திய முரண்பாடுகளினால், அல்லது அணு ஆயுதப் போரினால்-ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது. உறைபனியிமான சைபீரியா போல பிரிட்டன் மாற வாய்ப்புண்டு, ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்க நேரிடலாம். இவையெல்லாம் உண்மையாக நடந்திடுமா என்று மக்கள் வியப்பில் ஆழ்ந்திடக்கூடும். உண்மையில்,

இத்தகைய மாற்றங்கள் நேரிட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான கருத்து. ஆக, THE DAY TFTER TOMWRROW திரைபாபடம் பயமுறுத்தும் போல், உடனடியாக ஏதும் நடந்திட வாய்ப்பில்லை. ஆனாலும், ஒரு நாள் இவ்வாறு நடைபெற நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதில் அறிவியலாளர் உடன்படுகின்றனர். "நாளை மறுநாள் இந்த உலகம் உறைந்து போகாமல் தடுப்பதற்கு-எதையெல்லாம் செய்ய இயலுமோ அவற்றைக் கண்டிப்பாகச் செய்திடுவோமாக!"

0 கருத்துகள்:

About This Blog

என்றும், எங்கும், எப்போதும்
தோல்விகள் துரத்தி அடிக்கிறது
உரிமை, புரட்சி, எழுச்சி
வார்த்தைகளின் வறட்சி
நொறுங்கிப் போகிறது கொள்கை கோட்பாடு...!

Lorem Ipsum

வந்து போனவங்க

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP